யாழ். கரவெட்டியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

16 0

யாழ்ப்பாணம்  – வடமராட்சி கரவெட்டி வடக்கு பகுதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து கைக்குண்டு நேற்று(20.04.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி வடக்கு பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. இதன்போது காணி உரிமையாளர் நெல்லியடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து குறித்த கைக்குண்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.