கிம் ஜாங் உன்னுக்கு புகழாரம்: புதிய பாடலை வெளியிட்ட வடகொரிய அரசு

18 0

தமது நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னை  “நட்பான தந்தை” மற்றும் “சிறந்த தலைவர்” என்று புகழ்ந்து ஒரு புதிய பாடலை வட கொரிய அரசு வெளியிட்டுள்ளது,

இது அவரது நிலையை மேம்படுத்துவதற்கான பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது

இந்தப் பாடலுக்கான காணொளி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய தொலைக்காட்சியில் புதன்கிழமை ஒளிபரப்பப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் துருப்புக்கள் வரை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட வட கொரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், ‘சிறந்த தலைவரை பாடுவோம்” மற்றும் ‘ஒரு நட்பு தந்தையைப் பற்றி தற்பெருமை காட்டுவோம்” போன்ற வரிகளை மிக அதிகமாகப் பாடுவது இதில் இடம்பெற்றுள்ளது.

10,000 புதிய வீடுகளைக் கட்டி முடித்ததைக் குறிக்கும் விழாவின் ஒரு பகுதியாக, இசைக்குழுவுடன் இணைந்து கிம், இந்த பாடலை பார்த்த நேரடி நிகழ்ச்சியும் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வட கொரியாவை நிறுவியதில் இருந்து ஆட்சி செய்து வரும் கிம் குடும்ப வம்சம், அவர்களைச் சுற்றி ஆளுமை வழிபாட்டு முறைகளை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை வலுப்படுத்தி வருகிறது.

வட கொரிய அரசு ஊடகம் சமீபத்தில் பொது விடுமுறைக்கு பயன்படுத்தும் பெயரை மாற்றியுள்ளது.

இதன்படி, நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் பிறந்த நாளைக் கொண்டாடும் வருடாந்த பொது விடுமுறையை “சூரியனின் நாள்” என்று அழைப்பதற்குப் பதிலாக, அரச ஊடகங்கள் பெரும்பாலும் “ஏப்ரல் விடுமுறை” என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளன.

இதுபோன்ற மாற்றங்கள் கிம், தனது முன்னோடிகளை நம்பாமல் தனது சொந்த காலில் நிற்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.