அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது

18 0

அமெரிக்கா  – ஹோபோக்கன் நகரில் உள்ள பலபொருள் அங்காடியில் கொள்வனவு செய்த பொருட்களுக்கு பணம் கொடுக்காது செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி கற்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு மாணவிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோபோக்கன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிய பிறகு இருவரும் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்பொருள் அங்காடியிலள்ள ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு தகவல் வழங்கியள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரயை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது முன்பு வாங்கிய பொருட்களுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கைதானவர்களில் ஒருவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளனர்.

எனினும் தவறு நிரூபணம் ஆகியுள்ளமையினால் 2 மாணவிகளையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.