வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

324 0

 

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் ராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் அமைக்கப்பட்ட 150 வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.

சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் அமைக்கப்பட்டு லைக்கா ஞானம் கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு வீடு வழங்கும் நிகழ்வில், லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா குடும்பத்தாருடன் கலந்து கொண்டு வீடுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் வேறி, கீத் வாஸ் மலேசிய பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.