போதைப்பொருள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறிவிக்கவும்!

306 0

160418114622_pujith_igp_512x288_pujithfb_nocredit-450x253போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறியத் தரவும் என காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 071 859 2020 அல்லது 071 859 2022 என்ற தொலைபேசி எண்களுக்கூடாகத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு காவல்துறைமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.