மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்

21 0

சிட்னியின் பொன்டி வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்தவர் குயின்ஸ்லாந்தை சேர்ந்த 40 வயது ஜோ கௌச்சி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் மனோநிலை பாதிப்புக்குள்ளானவர் சில மாதங்களிற்கு முன்பே சிட்னியில் குடியேறினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் வன்முறை மிகவும் பயங்கரமானது என தெரிவித்துள்ள குடும்பத்தவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

கௌச்சி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்திய பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

கௌச்சி பெண்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டாரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய வன்முறையில் ஐந்து பெண்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.