பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

20 0

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுபான விருந்து ஒன்றில் இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை தொடர்பாக 8 சந்தேகநபர்களை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.