கேப்பாப்புலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!

22 0

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் காணி உரிமையாளர்கள் சிலர் (6 பேர்) கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அந்தவகையில் இன்றையதினம் இவ்வாறு ஆளுநரைச் சந்தித்தனர். தமது பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக ஆளுநர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.