போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆசிரியை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வியங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய ஆசிரியை ஒருவரும் 46 வயதுடைய அவரது தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபரான ஆசிரியையிடமிருந்து 2,300 மில்லிகிராம் ஹெரோயினும் அவரது தாயாரிடமிருந்து 4,500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் அத்தனகல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.