கார்பைட் தாங்கி வெடித்து ஒருவர் பலி ; கிரிபத்கொடையில் சம்பவம்

23 0

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுணுப்பிட்டிய பகுதியில் வானங்கள் திருத்தும் இடம் ஒன்றில் இருந்த கார்பைட் தாங்கி வெடித்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை  (8) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தேவலகம பகுதியைச் சேர்ந்த 45 வயது நபராவார்.

உயிரிழந்தவரது சடலம் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.