நீண்ட விடுமுறைக்கான மற்றுமொரு சேவை தொடர்பான அறிவிப்பு

19 0

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் விசேட தபால் சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ எம்.ஆர்.பி சத்குமார தெரிவித்துள்ளார்.

இந்த சேவை தொடர்பான அறிவிப்பை அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொது விடுமுறை தினமான ஏப்ரல் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள பிரிவுகளைக் கொண்ட தபால் / துணை தபால் நிலையங்கள் மூலம் பண விநியோகம், வெளிநாட்டு சேவை மற்றும் பொது பொதிகள் விநியோகம் ஆகியவற்றின் விசேட சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.