கிளிநொச்சி கவனயீர்ப்புப்போரட்டம் இன்று ஐம்பதாவது நாள்

257 0

 

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போரட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடைய உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று ஐம்பதாவது நாளாகவும் எந்தவிதமான தீர்வுகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த எட்டு வருடங்களிற்கு  மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டும் என கோரி பல்வேறு போரடடங்களை முன்னெடுத்த போதும் எந்தவித பதில்களும் கிடைக்காத  நிலையில் போராட்டம் தொடர்ந்து ஐம்பதாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.