வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

24 0

வவுனியா செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிலும் பட்டா ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் சாரதியான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இவ் விபத்தில் 21வயது மதிக்கத்தக்க இளைஞரே உயிரிழந்தவராவர்

சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.