களுத்துறை சிறைச்சாலை-விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

214 0

களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து நிறைவு செய்துள்ளது.

இந்த அறிக்கையை அச்சிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலக கோஷ்டித் தலைவர் என கருதப்படும் சமயங் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் ரூமி மருசூத் தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. குறித்த குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்கான இறுதிக் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிக்கையை மூவரடங்கி விசாரணை குழு விரைவில் அமைச்சரிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.