கிளிநொச்சியில் நகரில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள தனியார் காணிக்குள் இருந்து இந்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டுள்ளது.
இரவு வேளை உள்நுழைந்த அந்த சிறுத்தை குட்டியை, நாய்கள் கடித்து கொன்றிருக்கலாம் என வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வழமையாக சிறுத்தைகள் மஞ்சள் புள்ளியுடன் காணப்படும் எனவும் எனினும் குறித்த சிறுத்தை குட்டி வெள்ளை நிறப் புள்ளிகளுடன் காணப்படுவதாகவும் வன ஜீவராசிகள் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.