10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

23 0

கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் ( விடுதி) அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு சிறுமியின் தந்தையாவார்.

சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சந்தேக நபர் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து வைத்தியசாலை  அதிகாரிகளினால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 39 வயதுடைய சந்தேக நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.