ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்மார் தோட்டம் மேல் பிரிவில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 30 ஆம் திகதி யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவரை தேடி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சூரியகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துங்தொல பிரதேசத்தில் பெண் ஒருவர் ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.