பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை

20 0

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டிருந்த போது, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.