பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

34 0

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை (30) இரவு 11.15 மணிக்கு நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

தேலயத்தை சூழ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே தேவாலய ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு, மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்ற நிலையில், அந்த பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து, இன்று (31) காலையும் திருவிழா திருப்பலி பல தேவாலயங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.