2 வயதான குழந்தை கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு!

25 0

பலாங்கொடை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.