கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; கிராண்ட்பாஸில் சம்பவம்!

9 0

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபரொவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்  எல்லை மீறியதில் சந்தேக நபர், இவரை கத்தரிக்கோலால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.