குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் பொதுமன்னிப்பில் நாட்டை விட்டு வெளியேற அவகாசம்!

20 0

குவைத்தில் தொழிலை எதிர்பார்த்து அந்நாட்டில் தங்கியிருக்கும் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எவ்வித அபராதமும் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குவைத்துக்கான இலங்கைத் தூதுவர்  காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்த பொதுமன்னிப்புக் காலம் கடந்த 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை  அமுலிலிருக்கும்.

உத்தியோகபூர்வ தகவல்களின்படி, தற்போது குவைத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 19,620 இலங்கையர்களில்  சுமார் 5,000 இலங்கையர்கள் இலங்கைக்கு திரும்புவதற்காக தமது தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.