ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம்(காணொளி)

277 0

ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம் ஒன்றை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பஸ் நிலையத்திலிருந்த சடலத்தை நபரொருவர் கண்டறிந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் அலுத்கம பகுதியை சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான பொண்ணுசாமி கணேஷன் வயது 47 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முகம் மற்றும் உடற்பாகங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள உயிரிழந்த நபர் ஹட்டன் நகரின் பொதி சுமக்கும் தொழில் ஈடுப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் ஹாமினிபுர பகுதியை சேர்ந்த மெஹமட் அலீம் என்பரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.