ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் புதிய நாடாளுமன்ற தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் – கனடாவில் அனுரகுமார

21 0

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்வதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளாது என  கனடாவில் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் முறையில்மாற்றங்களை மேற்கொள்வதற்கான உத்தேச அரசமைப்பு சீர்திருத்தங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இலங்கை வாழ்சமூகத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இந்த தருணத்தில் தேசிய தேர்தலை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தாங்கள் அதிhரத்தை இழக்கப்போகின்றோம் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை மக்களின் கரங்களில் ஒப்படைப்பது குறித்து அவர்கள் அஞ்சுகின்றனர் இதன்காரணமாகவே தேர்தல்களை நடத்ததயங்குகின்றனர் என கனடாவில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கம் தற்போது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.  ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் அரசாங்கம் இதனை முன்னெடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என உத்தரவாதம் வழங்குகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

பசில்ராஜபக்சவும் அவரது குழுவினரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடுகின்றனர் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் குறிப்பிட்ட ஆசனங்களை தங்களால் கைப்பற்ற முடியும் என அவர்கள் நம்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் அரசமைப்பின் படி நாடாளுமன்றம் தனது ஆயுள்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்த பின்னர்ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கலாம் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் அதனை கலைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

2010- 2015 – 2019 இல் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை பெறதவறினால் கூட்டணி அமைக்க தகுதியானவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க தயார் எனவும்அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

எங்களால் 105 ஆசனங்களை பெற முடிந்தால் மக்கள் எங்களை ஏற்றுக்கொள்ள தயார் என்பதே அர்த்தம் இதனால் எங்களால் இணைந்து செயற்படமுடியும் என நாங்கள் கருதும் தனிநபர்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.