இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
எல்லகாவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதி ஒருவரும் ஹொரொவப்பொத்தான பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இராணுவ சிப்பாயொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களது சடலங்கள் கிரியெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.