160 பேருக்கு மத்திய மாகாணத்தில் ஆசிரிய நியமனம்

13 0

160 பேருக்கு வெள்ளிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்கிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் மத்திய மாகாண ஆளுநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

கல்வியியற் கல்லூரியில் மூன்று மொழிகளையும் சேர்ந்த ஆசிரிய பயிற்சியாளர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டுள்ள நிலையில் விடைத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்பதை இராதாகிருஷ்ணன் எம்பி சபையில் தெரிவித்த போது, அவர்களுக்கான நியமனத்தை அடுத்த வாரத்தில் வழங்க முடியும் என இதன்போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21)  கல்விக் குழுவின் தலைவர் என்ற வகையில் அது தொடர்பான விடயங்களை சபையில் சமர்ப்பிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.