தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னர் வழங்கிய உத்தரவை மீறியதாகக் கூறப்படும் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவியை நாளை 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தம்புத்தேகம நீதிவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், சந்தேகத்துக்குரிய அமைச்சரின் மனைவி அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிவான் தெரிவித்தார்.
ஐரங்கனி டி சில்வா என்ற பெண்ணையே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

