ஹொரவப்பொத்தான சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 18 பேர் காயம்!

41 0

கண்டியிலிருந்து ஹொரவப்பொத்தான  நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தம்புள்ளை நாவுல உடதெனிய பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான பல மின் கம்பிகள், தொலைபேசி கம்பிகள் மற்றும் மதில் என்பன சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து காரணமாக அந்த வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.