சுகாதார தொழிற்சங்கங்களின் நாளைய வேலை நிறுத்தம் இடைநிறுத்தம்!

120 0

சுகாதார தொழிற்சங்கங்களால் நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர்  ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.