உலர்ந்த சோறு , தேங்காய், சீனி ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ட மூவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில்!

115 0

மீகஹகிவுல பகுதியில் உலர்ந்த சோறு, தேங்காய், சீனி ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட மூவர் பாதிக்கப்பட்ட நிலையில்  மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் 14 , 34 , 28 வயதுடைய மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உணவை தேநீருடன் அருந்தியதன் காரணமாக  அதிக வாந்தி ஏற்பட்டதால் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.