கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம் ; தேடும் பணி தீவிரம்

31 0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை  கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில்  இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார் அவர் சென்ற தெப்பம் மட்டும்  கரையொதுங்கி உள்ளது.

மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய  முத்துச்சாமி தவராசா  என்பவரே  காணாமல் போயுள்ளார். காணமல் போனவரை தேடும்பணியில்  மீனவர்களும் கடற்படையினரும்  ஈடுபட்டுள்ளனர்.