பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல மனு!

16 0

தரமற்ற  தடுப்பூசி இறக்குமதி  தொடர்பில்   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைப்  பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பத்தை  இன்று (15)  சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து இந்த மனு  மீதான விசாரணைகள்  மார்ச் 18ஆம்  திகதிக்கு   ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் சுகாதார அமைச்சு  செயலாளர் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரின்  பிணை மனுவை  மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம்  நேற்று  (14) நிராகரித்தமை தெரிந்ததே.