அலவத்துகொடையில் குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

20 0

அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  அலவத்துகொடை நகரில் இன்று வியாழக்கிழமை (14) குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அலவத்துகொடை சய்ஸ்டன் உட்பட நான்கு கிராமங்களில் சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்கள் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தமக்கு குடி நீரை பெற்றுத்தர அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில்  நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர்.