உண்டியலை உடைத்து பட்டப்பகலில் திருடிய இரு பெண்கள் கைது!

26 0

கொழும்பு, அளுத்கடை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக உள்ள  விஹாரையின் உண்டியலை  உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (13)  பகல் 12.50 மணியளவில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்துக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்து வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.