மாபியா கும்பலுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.எஸ்.: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு

251 0

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டினார்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து கட்சியின செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தபோது, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்தன. மணல் மாபியா கும்பலுடன் ஓபிஎஸ் கூட்டு சேர்ந்துள்ளார். ஆனால், மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.