தாய்லாந்து, பாகிஸ்தான் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு !

37 0

தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (H. E. Paitoon Mahapannaporn) மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் மேஜர் ஜெனரல் (H.E. Major General (R) Faheem Ul Aziz, HI (M)), ஆகியோர் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  தங்களது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.