அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் இன்று சனிக்கிழமை (09) விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கெப் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெப் ரக வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த இந்த நபர் வீதியில் சென்றவர்களை மோதித் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் காயமடைந்த மூன்று ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பெண்கள் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதி அவருடன் இருந்த இரு நபர்களுடன் அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் இடைமாறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் வாகனம் பழுது பார்க்கும் கடையொன்றின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.