மூவருடன் மீன்பிடிப்பதற்காக சென்ற படகு மாயம்!

19 0

மீன்பிடிப்பதற்காக கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

ஈச்சங்காடு பிரதேசத்தை சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூவர் இந்த படகில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.