வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் – வடக்கு முதல்வர்.

333 0

வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாக இருப்பதாக இருப்பதாக ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல்லிடம் மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் அடங்கிய குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளநிலையில் வடமாகாண முதலமைச்சரையும் குறித்த குழுவினர் சந்தித்துள்ளனர்.
யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யுத்தம் காரணமா நாட்டிற்குள்ளும் இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிற்கு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவிலுள்ள அகதிகளை மீண்டும் அழைத்துவருவது வரவேற்கத்தக்கதென்றாலும் அவர்களின் வீடமைப்பு மற்றும் கல்வி பொருளாதார வசதிகளையும் கவனத்திற்கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தவேண்டும் என மதலமைச்சர் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.
அகதிகள் இல்லாத இலங்கையை உருவாக்க அரசு முயற்சித்து வரும்வேளை தமிழ் தலமைகளின் ஒத்துழைப்பையும் தாம் எதிர்பார்ப்பதாக டெய்ஜி டெல் கோரியவேளை தாம் இராணுவத்தினரின் பிரசன்னம் உள்ளிட்ட தடைகள் தொடர்பாக அதிகாரிக்கு தெளிவுபடுத்தியதாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.