யாழ். கோப்பாயில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

21 0

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் அந்த பெண் கைதாகியுள்ளார்.

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.