அசிட் வீசப்பட்டு ஐவர் காயம் ; இரத்தினபுரியில் சம்பவம்

25 0

இரத்தினபுரி உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற அசிட் வீச்சுத் தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் இன்று (6) காலை இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்று தொடர்பாக  இரத்தினபுரி உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்திருந்த தம்பதியினர் மற்றும் வீதியில் பயணித்த மூன்று சிறுவர்களுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இரத்தினபுரி புதிய நகரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேநபர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நீதிமன்ற வழக்கு ஒன்று தொடர்பாக இரத்தினபுரி உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞரது தந்தை என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.