கேரள கஞ்சாவுடன் மாசார் பகுதியில் இளைஞன் கைது!

20 0

பளை – மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர்  ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்  வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டார் .

கைது செய்யப்பட்ட இளைஞர்  மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில்  போதைப்பொருளை வைத்திருந்ததாகவும் இவர் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதை பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன்  இளைஞன்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.