ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்

221 0

மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம் என அந்த ஆணைக்குழுவின் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதி கே.டீ.சித்ரசிறி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் வாக்மூலம் வழங்குவதற்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் அங்கு முன்னிலையானார்.

இதன்போது வாக்குமூலம் பதிவு செய்து கொண்டிருந்த இடைநடுவே, அவர் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவர், வாக்குமூல பதிவு நடவடிக்கையை சிறிது நேரம் நிறுத்தி, இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என அவரை எச்சரிக்குமாறு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் அறிவித்துள்ளார்.