மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

218 0

வெலிகந்த – சிங்புர பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒரு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அந்த பிரசேத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் சீர்திருத்த பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கத்திற்கு உள்ளான மேலும் ஒருவர் பொலன்னறுவை பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ளவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.