ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது.

110 0

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது.

சுவிஸ்சில் பாசல், சொலத்தூண், பேர்ண், பிறிபேர்க் ஊடாக பயணித்து, 02.03.2024 இல் லவுசாண் நகரில் நிறைவுற்றது.

03.03.2024 இன்று 18 வது நாளாக லவுசாண் நகரில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம், ஜெனீவா நோக்கி 1400 கி.மீ மேற்பட்ட தூரத்தை மனிதநேய அர்ப்பணிப்பாளர்களின் தமிழின உறுதியுடன் கடந்து பயணிக்கின்றது.