உணவு ஒவ்வாமை – 3 பேர் உயிரிழப்பு, 400 பேர் மருத்துவமனையில்

368 0

அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வழங்கப்பட்ட பகல் உணவை உட்கொண்டவர்களே உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.