ரணிலை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

25 0

பொலிஸ் மா அதிபராக இன்று (29)  பதவியேற்றுக் கொண்ட தேசபந்து தென்னகோன் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற புதிய பொலிஸ் மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவருடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு பரிசில் ஒன்றை வழங்கினார்.