கம்பஹா ரயில் நிலையத்தின் இரண்டு பயணச் சீட்டுச் கருமபீடங்கள் மூடப்பட்டன!

31 0

கம்பஹா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குபவர்கள் பற்றாக்குறை காரணமாக இரண்டு இரண்டு பயணச் சீட்டுச் கருமபீடங்கள் மூடப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகவும்  பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பல பயணிகள் அவர்கள் செல்வதற்கு தயாரான ரயிலுக்கு  பதிலாக வேறு ரயில்களின் ஊடாக  பயணிக்க நேர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது .