அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது ; 5 மாணவர்கள் காயம்!

140 0

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து அம்பாறை ரணவிரு மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை பிரதேசத்தில் அமைந்து பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

அம்பாறை பாடசாலை பஸ் ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி வீழ்ந்து ஆற்றில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இந்த பாடசாலை பஸ்ஸில் சுமார் 30 மாணவர்கள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.