ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு

23 0

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று கோவில்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார், யாரும் எதிர்பாராத சமயத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புக்குள்ளானது.

அந்தசமயத்தில் அக்கம்பக்கத்தினர் தீக்குளித்த நபரின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினர். உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .